Saravanan P

Drama Crime Thriller

5.0  

Saravanan P

Drama Crime Thriller

விவேகம்: எனது எழுத்தில்

விவேகம்: எனது எழுத்தில்

5 mins
495


விவேகம் படத்தின் மூலக்கதையை படித்து எனது பாணியில் இந்த கதையின் போக்கு இப்படி சென்றால் என்னவாகும்? எப்படி இருக்கும்? என்பதே நான் தங்களுக்கு கூறிக்கொள்வது.


இது முழுவதும் கற்பனையான கதை.


அந்த ஹோட்டலில் மக்கள் அன்று கூடி இருந்தார்கள்,உணவருந்தவில்லை அங்கு அமர்ந்திருந்த அவர்களது குழந்தைகளை அழைத்து செல்ல.


யாழினி அனைத்து கேள்விகளுக்கும் தைரியமாக பதில் அளித்து கொண்டிருந்தாள்.


மக்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பிய பின் யாழினி அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தாள்.


மறுநாள்,மூன்று பேர் யாழினியின் உணவகத்துக்கு வந்து அவளிடம் உணவு ஆர்டர் கொடுத்து விட்டு உங்க கணவர் பற்றி எதாவது தெரியுமா? என கேட்க யாழினி தெரியாது என கூறினாள்.


உடனே அங்கிருந்து ஒருவன் எழுந்து துப்பாக்கியை கையில் எடுத்து "உன் தேச துரோகி கணவன் எங்க இருந்தாலும் அவனை நாங்க விட மாட்டோம்" என கூறிவிட்டு செல்ல திரும்பும் போது ஹோட்டல் கதவுகள் சாத்தப்பட்டு இருந்தது.


அங்கு நடந்து வந்த ஒருவன் இவர்கள் மூவரையும் பார்த்து ஒரு வேலை ஒழுங்கா செய்ய தெரியாதா? என கேட்டு விட்டு தண்ணீர்‌ பாட்டிலை எடுத்து விட்டு நகர்ந்தான்.


அப்பொழுது அந்த மூவரில் ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுந்தான்.


அந்த துப்பாக்கி சத்தம் மிக குறைவாகவே கேட்டது.


யாழினி சிரித்தாள்.


மற்ற இருவர் பயத்தில் யாழினியை பணையமாக பிடிக்க செல்ல இன்னொருவனும் சுடப்பட்டு கீழே விழுந்தான்.


கடைசியில் அங்கு ஒரு ரூம் கதவு திறந்து வெளிச்சம் வெளி வர அந்த மூன்றாவது ஆள் யாழினியையும் அந்த வெளிஞ்சத்தையும் மாறி மாறி பார்த்து விட்டு தன்னை தானே சுட்டு கொண்டு கீழே விழுந்தான்.


அந்த அறையின் உள்ளே இருந்து ஏகே வெளியே வந்து யாழினியை அணைத்து கொண்டு உனக்கு ஒன்னும் இல்லையே யாழினி என கேட்டு விட்டு கையை கழுவ சென்றான்.


யாழினி எப்படி இங்க வந்தீங்க? என கேட்க,பாசில் இருக்கான் என சொல்லிவிட்டு,இங்கிருந்து கிளம்பனும் என சொல்லி விட்டு யாழினியை‌ தேவையான மருந்து,மாத்திரைகளை எடுத்து கொள்ள கூறிவிட்டு ஏகே,யாழினி,பாசில் ஒரு ரகசிய இடத்திற்கு சென்றனர்.


யாழினி போகும் வழியில் நடந்த அனைத்து சம்பவங்களையும் நினைவு கூர்ந்தாள்.


6 மாதம் முன்பு,


ஏகே அன்று தனது அனைத்து நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்து நான் அப்பா ஆக போறேன் அப்படினு சொன்னதும் ஆரியன் மற்ற ஏகேவின் டீம் ஆட்கள் மகிழ்ச்சியில் துள்ளினார்கள்.


இப்பொழுது,


பாசில் ரெடியோவை ஆன் செய்ய ஆரியன் "அணு ஆயுதங்களை வெடிக்க வைக்க தேவையான கடவுச்சொல்கள் ஏகே எனும் தங்களுடைய பாதுகாப்பு துறை முன்னாள் வீரனிடம் இருப்பதாகவும் அவன் அதற்கு 50 மில்லியன் டாலர் நிழல் உலக அரசிடம் விலை பேசி இருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கு,நாங்க அவனை உயிரோட என சொல்லி தயங்கி விட்டு நிச்சயம் பிடிப்போம் அதுக்கு மக்களாகிய உங்களோட ஒத்துழைப்பு தேவை" என சொல்லிவிட்டு சென்றான்.


இதை கேட்டு ஏகே சிரிக்க,யாழினி எதுக்கு சிரிக்கீறிங்க என கேட்க,பாசில் உடனே மேடம் பாதுகாப்பு துறை வரதுக்கு முன்னாடியே ஏகேவ ஆரியன் கொன்னுடுவாராம் என கூறினான்.


ஏகே தனது அந்த ஒரு மிஷன் அவனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என நினைத்து பார்த்தார்.


நான்கு மாதங்கள் முன்பு,


ஏகே மற்றும் ஆரியன்‌ ஒரு நகரத்தின் வரைப்படத்தை கையில் வைத்து கொண்டு சில இடங்களை குறித்து வைத்தார்கள்.


ஏகே மற்றும் அவனது டீம்‌ செய்ய போகும் ஆபரேஷன் பற்றி ஆரியன் அவர்களது மேல் அதிகாரியிடம் கூறிக்கொண்டிருந்தான்.


"சார்,நம்மளோட டார்கட் நதாஷா,ஒரு ஹேக்கர்.


அவள் கிட்ட இரண்டு கடவுச்சொல் இருக்கு,அது இரண்டு மிகப்பெரிய அணு ஆயுதங்களை வெடிக்க வைக்கும்,இந்த வேலையை அவங்களுக்கு கொடுத்தது நிழல் உலக அரசை சேர்ந்த ஒரு ஆள்.


ஏகே மற்றும் அவனோட டீம் நதாஷாவோட பாய் பிரண்டை கடத்தி அவளை ஒரு இடத்திற்கு வர வைச்சு அரெஸ்ட் பண்ணுவாங்க."


அதே நேரத்தில் அந்த நகரத்தின் ஏர்போர்டை அடைந்த ஏகே மற்றும் டீம் மக்களுடன் மக்களாக கலந்தனர்.


அவர்கள் திட்டப்படி நதாஷா பாய் பிரண்ட்டை நெருங்கும் நேரம் இன்னொரு குழு வந்து அவனை கடத்தி சென்றது.


ஏகே தனது டீமை வைத்து அந்த குழுவிடம் இருந்து மீட்க திட்டம் தீட்டி அவர்கள் இடத்திற்கு செல்கின்றனர்.


அந்த இடத்தில் ஒரு உடல் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதை அவர்கள் உற்று பார்க்க அது தான் நதாஷாவின் பாய் பிரண்ட்.


அதோடு முடிக்காமல் நதாஷாவின் தலைக்கு விலை நிர்ணயம் செய்கின்றனர்.


ஏகே நதாஷாவை காப்பாற்ற திட்டமிட்டு தானே நதாஷாவின் பாய் பிரண்ட் போல் எலெக்டரிக் மாஸ்க் அணிந்து சென்று அவளை பிடிப்பதாக கூறினாள்.


ஏகே அவளது பாய் பிரண்ட் போல் ஒரு கடையில் காத்து இருக்க பின்னால் வந்த நதாஷா ஏகே மேல் கை வைத்து கூப்பிட வர ஏகேவின் டீம் நதாஷாவை கடத்தி விட்டு ஏகே நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அங்கிருந்து செல்கின்றனர்.


ஏகே சில குண்டடிகளுடன் எழுந்து ஆரியனை போனில் அழைக்க ஆரியன் அழைப்பை கட் செய்தான்.


ஏகே தான் ஒரு சூழ்ச்சி வலையில் மாட்டியாள்ளதை உணர்ந்து அங்கிருந்து நகர முயல் நதாஷாவின் பாய் பிரண்ட்டை கடத்திய கும்பல் அவனை துரத்த ஆரம்பித்தது.


ஏகே தன்னுடைய வார்த்தைகளால் அவர்களை தனக்கு உதவி செய்தால் நதாஷாவை கொண்டு வர உதவுவேன் என கூற அந்த கும்பல் ஒப்புக்கொண்டது.


ஏகே பாசிலுக்கு போன் செய்து யாழினியை பார்த்து கொள்ள கூறிவிட்டு தன்னுடைய காயங்களை சரி செய்து கொண்டு அந்த கும்பலுடன் தன்னை ஏமாற்றிய டீமை பழிவாங்க துடித்தான்.


அந்த டீம் ஒரு தடைசெய்யப்பட்ட காட்டு வழியில் தப்பிச்சென்று கொண்டு இருக்க ஏகே அந்த கும்பலை வைத்து முதலில் அவர்களை சுற்றி வளைத்தான்.


இதை நாங்க எதிர்ப்பார்க்கல ஏகே என அந்த டீமில் ஒருவன் சிரித்து கொண்டே ரிமோட் பட்டனை அழுத்த அங்கங்கு பாம் வெடிக்க தொடங்கியது.


ஏகே குறி வைத்து இரண்டு பேரை அவனது டீமில் சுட்டுத்தள்ள மற்ற மூவரும் நதாஷாவுடன் ஓட தொடங்கினர்.


அந்த கும்பலில் பலர் இறந்து விழ,ஏகே வேறு வழி இல்லாமல் நதாஷாவை சுட்டு விடுகிறான்.


அந்த டீம் ஆட்கள் சுதாரிப்பதற்குள் அந்த கும்பலை வைத்து அனைவரையும் சுட்டு விடுகிறான்.


நதாஷாவை அந்த கும்பல் தங்களது மருத்துவமனை அழைத்து செல்ல ஏகே நதாஷா சரியான உடன் அங்கிருந்து தப்பிக்க முடிவு எடுத்தான்.


நதாஷாவை அந்த கும்பல் கடவுச்சொல் கேட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பித்தது.


ஏகே நதாஷாவை அங்கிருந்து அழைத்து கொண்டு ஒரு நாள் தப்பித்தான்.


அப்பொழுது நதாஷா இந்த வேலையை எனக்கு தந்ததே ஆரியன் என உண்மையை கூறி விடுகிறாள்,தான் அவனுடைய நிழல் உலக அடையாளத்தை கண்டுபிடித்ததை அறிந்து என்னை கொல்ல ஆள் அனுப்பி உள்ளான் என கூறினாள்.


அந்த இரண்டு கடவுச்சொல் என ஏகே கேட்க அதுல ஒன்னு என் பாய் பிரண்ட் கிட்ட இருந்து எடுத்து இருப்பாங்க,அந்த இன்னொரு கடவுச்சொல் என் கிட்ட இருக்கு என சொல்லிக்கொண்டே ஏகேவை பார்த்து உங்களை நம்புறேன் என சொல்லி விட்டு அந்த கடவுச்சொல் மற்றும் இந்த அணு ஆயுதங்களை தடுக்க தேவையான கடவுச்சொல்களையும் கூறிவிட்டு நாங்கள் பணத்துக்காக செய்த தவறால் இன்னொரு உயிர் போக கூடாது என கேட்டு கொண்டு அவளுடைய காயங்களால் அவனது கைகளில் இறந்து போனாள்.


இதனால் ஏகே அவளுடைய ஆசையை நிறைவேற்றவும் மற்றும் இது அனைத்துக்கும் காரணமான தனது நண்பர்களை,குற்றவாளிகளை தடுத்து நிறுத்த செயல்பட தொடங்கினான்.


ஏகே தன்னிடம் மற்றொரு அணு ஆயுதத்தை வெடிக்க வைக்கும் கடவுச்சொல் இருப்பதாகவும் அதை ஆரியனுக்கு தர வேண்டுமானால் தனக்கு ஆரியானால் வந்த தேச துரோக கலங்கம் மற்றும் தனது மனைவிக்கு பாதுகாப்பு கேட்க ஆரியனின் ஆட்கள் ஒப்புக்கொண்டனர்.


ஆனால் ஏகேவை அவர்கள் உண்மையை மிரட்டி வாங்க முயல அவன் அனைவரையும் கொன்று விட்டான்.


இப்பொழுது,


ஏகே யாழினியின் நீ எனக்கு இந்த உதவி செய்யனும் செய்வியா? என கேட்க யாழினி அதை புரிந்துகொண்டு சரி என ஒப்புக்கொண்டு காரை விட்டு இறங்கி ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்து ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தாள்.


ஆரியனின் ஆட்கள் வந்து அவளை கடத்தி சென்று ஆரியன் முன் நிறுத்த உக்காருமா என அவளை நாற்காலியில் அமர வைத்து விட்டு ஏகே இங்க வந்தா போதும் என ஏகேவிற்கு வீடியோ கால் செய்து யாழினியை காண்பித்து மரியாதையாக தன் முன் வருமாறு கூறினான்.


ஏகே அங்கு செல்ல ஆரியனின் ஆட்கள் அவனை அடித்து இன்னொரு சேரில் கைவிலங்கு மற்றும் கால் விலங்கு வைத்து கட்டிப்போட்டனர்.


ஆரியன் அவனுடைய கோரிக்கைக்கு ஒப்புக்கொள்வதாகவும் அந்த கடவுச்சொல்லை கேட்க ஏகே சிரித்து கொண்டே சொன்னதை செய் நண்பா என கூறிவிட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.


ஆரியன் அனைத்தையும் செய்து முடிக்க ஏகே ஒரு கடவுச்சொல்லை அவனிடம் தந்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.


ஆரியன் அதை எடுத்து கொண்டு அணு ஆயுதம் இயக்கும் இடத்திற்கு சென்று முடிக்க அங்கு ராணுவம் காத்து இருந்தது.


ஏகே முன் வந்து அந்த இரண்டு ஆயுதத்தையும் முழுமையாக செயல்படாமல் தடுத்ததாக கூற ஆரியன் அதிர்ச்சியில் உறைய ஏகே தன் முகத்தில் இருந்த எலெக்டரிக் மாஸ்க்கை எடுக்க அங்கு நின்றது ஏகேவின் மேல் அதிகாரி.


ராணுவம் ஆரியனை கைது செய்து செல்ல,மேல் அதிகாரி ஏகேவை பார்த்து சல்யூட் அடிக்க ஏகே தனது மனைவியுடன் தங்களது ஹோட்டலுக்கு சென்று அதை சரி செய்ய தொடங்கினர்.



Rate this content
Log in

Similar tamil story from Drama