அந்த நாட்கள்
அந்த நாட்கள்
இற்றது உற்றது எல்லாம்
எங்கோ ஏதோ புதையுண்ட நகரமாய் புதையுண்டு கிடக்க
தேடிச்செல்கிறேன் !
கண் எதிரே தோன்றும் அந்த நாட்களுக்கு !
தீக்குச்சிகளை சேர்த்து வட்டம் போட்டு பற்ற வைத்ததும்
அய்யோ நெருப்பென்று கத்தவே
அங்கே அந்நினைவுகள் மலருதே !!
எங்கோ பாதையில் செல்லுகையில் தும்பி பறக்க
அதை பிடித்து விளையாடிய நினைைவு திரும்புதே !
எங்கோ ஊர் தெரியா இடத்தில் ஒற்றை அடிசில் உணவருந்த
எங்கோ அடித்துக்கொண்டு
ஊண் சோறு உண்டது
ஞியாபகமயமாகுதே !
விமானத்தின் சக்கரங்கள் வானில் பறக்கையில் அங்கு அமர்ந்திடினும் ஏனோ தோழனின் மிதிவண்டி பயணத்தின் சுகம் மலருதே!
யாரோ ஒரு மகன் தந்தையிடம் மதிப்பெண்ணுக்காக திட்டு வாங்கையில் என் மனம் சற்று நொறுங்கிப்போகின்றது !
இன்னும் அந்த வலியின் நினைவும் மனதை
அகலாது இருத்தலால்.