அருமையான தாய்மை
அருமையான தாய்மை
அம்மா!
அவள் தயவின் தூய ஆன்மாவாக இருக்கிறாளே !
அவளுடைய எல்லையற்ற பாசத்தை யாரால் காட்டமுடியும் ?
நம் இதயங்களை சோகங்களிலிருந்து விடுவிக்கிறாளே !
இந்த மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை யாரால் கொடுக்கமுடியும் ?
அவள் அறிவுரைகளும் அவளது மென்மையைக் காட்டுகின்றனவே !
அவள் கைகள் அரவணைப்பது போல் யாரால் அணைத்துக்கொள்ளமுடியும் ?
நீ ஒருமுறை அழ பலமுறை துடித்து போவாளே !
அவள் கவனிப்பது போல யாரால் பார்த்துக்கொள்ள முடியும் ?
அவள் கோபங்களும் அன்பின் வெளிப்பாடு தானே !
அவள் அன்பிற்கு இணை இவ்வுலகில் ஏதேனும் உண்டோ ?
அருமையான தாயின் காதலை வருணிக்க
எந்த கவிதை ஒன்று போதாதே !