காத்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்
என் காலம் முடியும் வரை
அவள் வருவாளென்று!
அவளை விழிகளில் வாங்கிக் கொள்ள,
அவள் விழிகளில் நான் விழுந்துவிட,
அவளின் உரத்தக் குரலை
ஒருமுறையாவது கேட்டுவிட,
அவளின் புன்னகைப் பூக்களைப்
பறித்துக்கொள்ள
காத்திருக்கிறேன்
என் காலம் முடியும் வரை!
உண்மை என்னவென்றால்,
அவள் வரமாட்டாள்!
ஒருவேளை அது எனக்குத் தெரிந்து விட்டால்?
- முகிலன் அப்பர்