நட்பு
நட்பு
வாழத்துடிக்கும் வண்ணத்துப்பூச்சி நாங்கள் ,
வாழ்கையின் இடையில் தோன்றும் வானவில் நாங்கள் ,
வானத்தை எட்டி பிடிக்கும் வங்கக்கடல் நாங்கள் ,
புல் மேல் அமரும் பனித்துளி நாங்கள் ,
உலகமே அண்ணாந்து பார்க்கும்
அழகிய பறவைகள் நாங்கள் ,
இளைப்பாற தோள் கொடுக்கும் தோழமையும் நாங்கள்,
மனதோடு கதைப்பேசும் தாய் மடி நாங்கள் ,
தந்தையின் கண்டிப்பான அரவணைப்பு நாங்கள் ,
யாதும் ஊரே யாவரும் கேளீர் என இருப்பினும்
வேடந்தாங்கல் பறவை நாங்கள் !!!
~ கீதா