பறக்கத்தான் ஆசை
பறக்கத்தான் ஆசை
பறக்கத்தான் ஆசை!!!
பறக்கத்தான் ஆசை வானில் மட்டுமல்ல வையகத்திலும்!!
வலி அறிய வாழ்க்கையில் விழி அறிய..!!
எதற்கும் ஓர் விலை உண்டு
இப் பிரபஞ்சத்தில் ..!!
மனிதனால் சூழப்பட்டது மனிதனுக்கே நிலைப்பட்டது..!!
ஒவ்வொரு விடையும் தடையாகவே!
ஒவ்வொரு தேடலும் தேடலாகவே!! ஒவ்வொரு வழியும் வழியாகவே!!
ஒவ்வொரு விதியும் விதியாகவே!!
ஒவ்வொரு வினையும் வினையாகவே!!
ஒவ்வொரு பயணமும் விபத்தாகவே!!
ஒவ்வொருவர் கனவும் கனவாகவே!!!
மாறுதல்களும் மாற்றங்களும் இப்படி ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் பல சூழ்நிலையில் ..!!
விழி மேல் நெருப்பு ஒன்று அருகினில் வாடுதே ...!!
படுக்கையும் பாய் மரம் போல் கடக்குதே ...!!
எதிர்த்து நின்று போராடி தன் கை நம்பிக்கை ..!!
நயத்தோடு நாளை நமக்காக!!
எதுவும் முதலில் பிழை அதுவே நிலை!!
நாளைய வாழ்வின் கலை ...!!
சுகம் இல்லா வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் ..!!
வெற்றி தோல்வி அனுபவங்கள்
நம்முடன் தினம் பயணிக்கும் பறவை ....///
நன்றிகளுடன் ...
கவிஞர் ம.செல்லமுத்து
எம்.ஏ..பி எட் ...
நூ த்தப்பூர் அஞ்சல்
பெரம்பலூர் மாவட்டம்