ராதை கண்ணன் காதல்
ராதை கண்ணன் காதல்
கோகுலத்தில் ராதை,
புல்லாழாங்குழல் ஒலிக்கும் ஓசை,
மெல்ல விலகுவதை உணர்ந்து கொண்டாள்,
வெளி வந்து பார்த்த பொழுது,
கண்ணன் கோகுலம் விட்டு செல்ல கண்டாள்,
இரவு சந்திரனின் ஒளியும்,
யமுனை நதிக்கரையும்,
அவளுக்கு மகிழ்வு தரவில்லை,
அந்த மகிழ்வின் காரணம்,
இப்பொழுது அவளுடன் இல்லை,
சேர்ந்த காதலர்கள் கதைகளுடன்,
சேராத காதலர்கள் கதைகள் ஏராளம் உண்டு,
அதனுடன் ஒன்று ஆனது,
இந்த ராதை கண்ணன் காதல் கதை.