தி அமேசிங் ஸ்பைடர் மேன்
தி அமேசிங் ஸ்பைடர் மேன்
தந்தை,தாய் விட்டு செல்ல,
புது குடும்பத்துடன் இணைந்தான்,
அவர்களும் தாய்,தந்தை போல்,
என தாமதமாக உணர்ந்தான்,
இழந்த பின் புரிந்துகொண்டான்,
பொறுப்பின் முக்கியத்துவத்தை,
இவன் மீது காதல் கொண்ட பெண்,
இவனுக்கு அன்பை,
அரவணைப்பை தந்தாள்,
அவள் நலம் கருதி,
பொதுநலம் பெரிது,
என சிலந்தி மனிதன் ஆனான்,
காதலில் விழுவர் சிலர்,
ஆனால் காதலி அவன் பிடி நழுவி இறந்தாள்,
வலியும்,வேதனையும் மிகுந்திட,
தனிமையை நாடினான்,
காதலி அவனுக்கு முன்பு சொன்ன,
அறிவுரை ஏற்று,
மீண்டும் மாறினான் சிலந்தி மனிதனாய்.