சிற்றெரும்பு ஆசிரியர்
சிற்றெரும்பு ஆசிரியர்
ஆயிரம் கவலைகள் சூழ்ந்து நின்றது
அடிவயிறும் கூட கலங்கி நின்றது
என்ன செய்வதென்றும் புரியவில்லை
யாரிடம் சொல்லி அழுவதென்றும்
தெரியவில்லை!!!
தூரத்தில் இருந்து திடீரென ஒரு சிற்றெரும்பு தென்பட்டது...
என்ன செய்கிறது என கவனித்தேன்!!!
அழகானது
அதன் வாழ்க்கையைப்போல!!!
அமைதியானது
அதன் குணத்தைப்போல!!!
எறும்பைப்போல்
ஒற்றுமையுள்ள ஒன்றை
நீங்கள் பார்த்ததுண்டா..?
அது
தனித்துவாழ ஒருபோதும்
விரும்புவதில்லை
எறும்பை
உற்று நோக்குங்கள்
வாழ்க்கையை உங்களுக்கு
கற்றுத்தரும்
எறும்புக்கு
கற்றுக்கொடுத்தவர்
யாருமில்லை, கடவுளைத்தவிர!!!
யாரையும் தீண்டுவதில்லை
தனக்கு தீங்கிழைத்தோரைத் தவிர!!!
ஒருபோதும் ஏமாறுவதில்லை
அது முயற்சியுடையது
எறும்பை பேசாதீர்கள்
அது கடவுளின்
உன்னத படைப்பு
சோம்பேறியே
எறும்பைப் பார்த்தாவது
எழுந்து நில்!!!
சிற்றெரும்பு தான் எனினும்
பாடம் கற்பித்த ஆசிரியர் அவர்...
அவர் தான் சிற்றெறும்பு...
🙏 🙏 🙏
என்னடா இவன் சித்தெறும்புக்கு இவ்வளவு பில்டப் தருகிறானே என்று எண்ணுகிறீர்களா வாசகர்களே...
சிறு உயிரையும் பெரிதென மதிப்போம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவதே சிறப்பு...
நம்மை விட ஆயிரம் மடங்கு சிறிய உயிரினம் தான் ஆனால் அது நம் காதில் புகுந்தால் கொஞ்ச நேரத்தில் நம்மை ஆட்டம் காணச் செய்யவல்லது...
ஆகவே எனது மிகச்சிறந்த ஆசிரியர் கடின உழைப்பாளியான சிற்றெரும்பு மட்டுமே
😉😉😉