அறியாத மனதில்
அறியாத மனதில்
நீ அறியாத மனதில்,
துன்பங்கள் பல உண்டு,
இன்பங்களும் சில உண்டு,
பல ஆறாத காயங்களும் உண்டு,
விவரிக்க முடியாத காதலும் உண்டு,
சொல்லில் அடங்காத அன்பும் உண்டு,
உன்னை மறக்க முடியாத நினைவுகளும் உண்டு,
உன்னிடம் சொல்லாத மௌனமும் உண்டு,
அதற்கு காரணம் நீ மற்றும் உந்தன் காதல் என்பதை அறிவாயா?