சுதந்திர இந்தியா
சுதந்திர இந்தியா
மெய் சிலிர்க்கும் நொடிகள் பல
மெட்டுடன் கீதை தந்ததே...
உள் உணர்வாய் உருவம் கொண்டு
உரிமையுடன் அன்பு தந்ததே...
கண்ணீர் சிந்தும் கண்மணிகளுக்கு
கடமையுடன் கல்வி தந்ததே...
பெண் என கேலி கூறுவோர்க்கு
பெருமையுடன் குரல் தந்ததே...
வஞ்சகமில்லா பூமி இது என்று
வசனத்துடன் வீரம் தந்ததே...
சாதியம் என்பதை ஒழித்திட
சமத்துவத்துடன் ஒற்றுமை தந்ததே...
உயிர்கள் எல்லாம் மகிழ்ந்து வாழ
உளமார உறுதி தந்ததே...
எண்ணற்ற வாய்மை வெல்லவே
எழுச்சியுடன் சுதந்திரம் தந்ததே...
இதுவே எனது இந்தியா
என் சுதந்திர இந்தியா !!!