இயற்கை அழகு
இயற்கை அழகு
வற்றாத ஜீவ நதிகள்,
பூமியெங்கும் பசுமை போர்வை;
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்;
எழில் மிகுந்த தொடர் முகடுகள்,
நுரை ததும்பும் அலைகடல்,
எல்லையில்லா பெருவெளியில்
பரவசமூட்டும் இரகசியங்கள்,
எங்கும் எதிலும் புதைந்திருக்கும் வியக்கச்செய்யும் அற்புதங்கள்
வார்த்தைகளால் வர்ணிக்க
இயலாத அதிசயங்கள்;
புலவர்கள் பண்ணிசைத்து புகழாரம் சூட்டினார்
இயற்கை அளித்த அழகின்
பேருண்மை தனை;
ஏனெனில்...
அவை காணக் காண பிரமிப்பளிக்கும், நினைவுகளில்
காட்சி பிம்பமாகி
ஆட்சி செய்யும்
எழிலரசியே
இயற்கையின் பேரழகு.