காலம்
காலம்
காலமது கடக்க யாவும் கடந்திடும். கண்ட காட்சிகளும் கடக்கும். கவலையும் கடக்கும். கடந்தவையின் நினைவுகளும் கடக்கும்.. காயமதும் கடக்கும். கலங்கியனவும் கடக்கும். கனவுகளும் கடக்கும். காளை பருவமும் கடக்கும். கொண்ட காதலும் கடக்கும்.
காலத்தின் விடைதனை மட்டும் கடந்திடுதல் தான் கடந்திடாதது.