மெல்லப் புதையும் மனிதம்
மெல்லப் புதையும் மனிதம்
போரின் கரங்கள் இறுகிப் பிடிக்க
கருகிச் சாய்கிறது...
மனிதம்...
கருணையின்றி...இரத்தக் கண்ணீரில்!
மரணம் எந்த நொடியில் எனப்
பதறவைக்கும் நொடிப் பொழுதுகளின் சப்தம்...
இமைக்கா
நெஞ்சத்தின் அலறல்...
கேட்பவர் யாரிங்கே...இப்பூவுலகில் !
தான் தனது என்னும் அகங்காரம் ஒரு புறம்...
தனது உரிமை தனது நிலம் எனும் நிலைப்பாடு ஒருபுறம் ...
மோதலில் தொடங்கும் எந்த ஒன்றும்
நிம்மதியைத் தருவதில்லை...
அந்தோ ! அப்பாவிப் பெருமக்கள்
என்ன குற்றம் செய்தனர்
இந்தத் தவறில்...!
மதத்தின் பெயரால் ...
ஆணவத்தின் அலட்சியத்தால்...
பண பலம் படை பலம் கொண்ட செருக்கால் ..
நிலம் பெருக்கும் வன்திமிரால்...
இன்னும்
இந்த மண்ணுலகில் பேரழிவுகள் தான் எத்தனை எத்தனை !
கண்கள் பார்க்க மறுக்கிறது...இந்த அவல நிலையை!
காதுகள் கேட்கக் கூசுகிறது...அலறல் சத்தம் கேட்க ஒண்ணாமல்...!
மனம் பதறித் தவிக்கிறது...பிஞ்சு நெஞ்சங்கள் சிதறும் நிலைகண்டு !
போதும் மானுடமே...இந்தப் போரின்
வன்மங்கள்!
மெல்லப் புதையும் மனிதம் இனியாவது
மெல்ல எழட்டும்...
அன்பினில்...
என்றும்
என்றென்றும்...
நாம் அனைவரும் மனிதர் எனும் ஒற்றுமை உணர்வில்!
Written by,
MK