பேறுகள் பதினாறு
பேறுகள் பதினாறு
தனையறியும் கல்வியும்
தளிர் போன்றும் வயதும்
துணை நிற்கும் நட்பும்
செழிக்கின்ற வளமையும்
ஓங்குகின்ற இளமையும்
தழைக்கின்ற உடல் நலமும்
முயலுகின்ற பொன்மனமும்
அன்போங்கும் மனையாளும்
புகழ் சேர்க்கும் பிள்ளைப் பேறும்
இறை அருளும் கீர்த்தியும்
நாணயம் கலந்த நா நயமும்
ஈந்துவக்கும் கொடையும்
பெருகுகின்ற மங்களமும் செங்கோலும்
இன்புறுகின்ற வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய்...
அலை ஆழி பேரறிவில் எழில்கொள்
மாயனது தங்கையே...
ஆதி கடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒரு பாகம் கலந்திட்ட சுகபாணி!
அருள்வாமி ! அபிராமியே !
நன்றியுடன்...MK🎶🕊️