கனவு
கனவு
கனவு.
ராஜி ஒரு பள்ளி ஆசிரியை.அவளுடைய அப்பா ஒரு இராணுவ தலைவர்.பல ஊர்களில் பணி புரிந்து இருக்கிறார்.பள் போர் களம் கண்டவர்.தீவிர வாதம்,அதுவும் எல்லை கடந்த தீவிரவாத போராளிகளை சரியான நேரத்தில் அளித்து நாட்டை காப்பாற்றி இருக்கிறார்.அவர் இன்னும் ஒரு ஆண்டில் ஓய்வு பெற்று விடுவார்.அவரை போல நாட்டிற்க்கு சேவை செய்ய ராஜிக்கு நீண்ட நாளைய கனவு.ஆனால் அவள் கனவு நனவாக இறைவன் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை.அவள் ஒரு மாற்று திறனாளி..அதன் காரணம் அவளுக்கு திருமணமும் தள்ளி போக,திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து ஆசிரியை பணியை செய்து வருகிறாள்.
அவளுடைய கனவை நிறைவேற்ற,அவளால் முடிந்த முயற்சிகளை செய்து வருகிறாள்.தன்னுடைய மாணவர்களுக்கு தினமும் தேச பக்தி,தேச பற்று
பற்றி வகுப்பு எடுக்காமல் இருக்க மாட்டாள்.
வகுப்பில் அவளுடைய தந்தையின்,அனுபவங்களை கதையாக கூறி மாணவர்களுக்கு தேச பக்தியை ஊட்டி வளர்த்து வந்தாள்.
ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தால்,என்னென்ன பயன் கிடைக்கும்.வசதிகள்,ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் சலுகைகள் பற்றி கதை கதையாக சொல்லுவாள்.
இப்போதே அவளுடைய மாணவர்களில்,பத்து பேர்,ராணுவத்தில் பணி புரிய விருப்பம் கொண்டு,அதற்கான உடற் பயிற்சி,விளையாட்டுகள்,உயரம் தாண்டுதல்,ஒட்ட பந்தயம் என்று கலந்து பரிசுகளை வென்று கொண்டு இருக்கிறார்கள்.
18 வயது நிரம்பியதும் ராணுவத்தில் சேர முடியும்.
அதற்குண்டான தேர்வுகள் எழுத தன் தந்தையின் உதவியுடன்.ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மூலம் மாணவர்களுக்கு மாலை நேரம் பாடங்களை சொல்லி தர ஏற்பாடு செய்தாள்.அவள் கனவை நனவாக்க மாணவர்களை பெரிதும் நம்பினாள்.
அவள் கனவு வீண் போகவில்லை.அந்த பத்து பேரில் ஐந்து பேர் உயர் பதவிக்கு தேர்ச்சி அடைந்து இருந்தார்கள்.
தன்னுடைய முயற்சி பெரிதும் பலன் அளித்தது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி.
ஜெய்ஹிந்த்.