Vadamalaisamy Lokanathan

Romance

5  

Vadamalaisamy Lokanathan

Romance

காதல்

காதல்

3 mins
13


காதல்


பண்டரினாதன் ஒரு சினிமா தயாரிப்பாளர்.பல வெற்றி படங்களை பெரிய பொருள் செலவில். உருவாக்கியுள்ளார்.

ஆனால் இது வரை ஒரு காதல் கதையை படமாக எடுத்தது இல்லை.

அது அவருக்கு நீண்ட நாள் கனவு.பலரிடம் காதல் கதையை கேட்டுப்பார்த்தார்.ஒன்றுமே அவருடைய மனதை கவரவில்லை.


ஒரு நாள் பயணமாக கோவையில் இருந்து சென்னை செல்ல இரயில் நிலையம் சென்றார்.போன பிறகு தான் தெரிந்தது,அவர் போக வேண்டிய இரயில் இன்னும் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து சேரவில்லை என்று.


சரி பொழுதை போக்க வேண்டும் என்று பிளாட்பாரம் கருங்கல் பலகையில் அமர்ந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர்,ஒரு டீ வாங்கி கொடுங்கள் என்று கேட்க,இவர் ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து கொடுக்க,அதை அவர் வாங்க மறுத்து விட்டார்.இவருக்கு சங்கடமாக போய் விட்டது.பணம் வேண்டாம்,பசியாற உணவு மட்டும் போதும் என்று கேட்ட அந்த மனிதனை வியப்புடன் பார்க்க,அவரும் இவரை பார்த்துக்கொண்டே இருந்தார்.

அந்த நேரம் டீ விற்று கொண்டு வர,அவரிடம் டீ வாங்கி அவருக்கும் கொடுத்து விட்டு,தானும் ஒரு டீயை பருகியவாறு,ஏன் பணத்தை வாங்க மறுத்து விட்டீர்கள் என்று கேட்க,

ஐயா,நான் பிச்சைக்காரன் அல்ல.பல வருடங்களாக இங்கேயே தங்கி இருக்கிறேன்.என்னுடைய காதலி வருவாள் என்று சொன்னதை நம்பி.ஒரு வேளை இங்கு இருந்து போன நேரத்தில் அவள் வந்து விட்டால்,பார்க்க முடியாமல் போய் விடும் என்று இருபத்துநான்கு மணி நேரமும் இங்கு அவளுக்காக காத்து இருக்கிறேன்.

ஏன் அவர் இன்னும் வரவில்லையா, என்று கேட்க,வருவாள்,என்னை இங்கு காத்து இருக்க சொல்லி விட்டு சென்று இருக்கிறாள்.

அவள் தன் கணவனிடம் விடுதலை வாங்கிக்கொண்டு வந்து பிறகு என் காதலை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாள்.

அது எப்படி,அவர் திருமணம் ஆனவர்,உங்கள் மீது எப்படி காதல்.

ஐயா என் மீது அவளுக்கு எந்த காம ஈர்ப்பும் கிடையாது.அவளுக்கு தேவை அன்பு மட்டுமே.இன்னும் சொல்ல போனால் அவள் என்னை விட இருபது வயது சின்னவள்.

வேலைக்காக,இருவரும் இங்கு இருந்து திருப்பூருக்கு ஒன்றாக ரெயிலில் சென்று வந்து கொண்டு இருந்தோம்.சரளமாக பேசி பழகிய அவள்,ஒரு நாள் என்னை பார்த்து காதலித்த அனுபவம் உண்டா என்று கேட்டாள்.

அம்மா நான் காதலித்து தான் திருமணம் செய்தேன்.ஒரு வருடத்தில் என்னை விட்டு பிரிந்து போய் விட்டாள்.அவளுக்கு அதிகம் காமம் தேவைப்பட்டது.அவள் தேவையை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை.பிரயாண களைப்பு,பணி நிமித்தம் மன அழுத்தம் போன்ற காரணங்கள்.அவளிடம் சொல்லி பார்த்தேன்,அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.ஒரு பெண்ணின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாத உனக்கு காதல் ஒரு கேடா என்று திட்டி,விவாகரத்து வாங்கி கொண்டாள்.

ஆனால் இவளோ எனக்கும் காதலிக்க ஆசை தான்.ஆனால் வீட்டில் அவசரப்பட்டு தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.அவனுக்கு காமத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது.இது வரை அன்பாக ஒரு வார்த்தை பேசியது கிடையாது.ஐந்து வருடங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்பது அவனுடைய கண்டிசன்.அவனுடைய காம இச்சைக்கு அது இடையூறு என்று சொல்கிறான்.ஆசையோடு வாங்கி கொடுக்க சொன்னால்,உனக்கு நான் வாங்கி தர வேண்டுமா நீ சம்பாதிக்கிற,நீயே வாங்கி கொள்.

நான் சம்பாதிக்காவிட்டல் வருமானத்திற்கு வழி.அவன் வேலைக்கும் போவது இல்லை.ஒரு வேளை பெண்டாட்டி ஆசையோடு கேட்டால் வாங்கி கொடுக்க பணம் வேண்டும்.அதற்காக ஒரு வேலைக்கு செல்வான் என்று எதிர்பார்த்தேன்,நடக்கவில்லை.

என்னை யாராவது காதலிப்பார்களா என்று ஏக்க பட்டது உண்டு.காதல் என்றதும் எல்லோரும் காமத்தை பற்றி தான் நினைக்கிறார்கள்.அன்பு, பாசம் அரவணைப்பு,கேலி கிண்டல்,அக்கறை இப்படி பல உணர்வுகளை உள்ளடக்கியது காதல்.

தோள்மீது சாய்ந்து கொண்டு ரெயிலில் பயணம் செய்ய ஆசை.கைகோர்த்து அமர்ந்து,கதைகள் பேச ஆசை.ரெயிலில் விற்கும் சமோசா வாங்கி காக்கா கடி போட்டு சாப்பிட ஆசை.இந்த ஆசையெல்லாம் உணர்ந்த ஒரு காதலன் கிடைப்பானா என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.ஆனால் எல்லோருமே என் உடல் மீது தான் காதல் கொள்கிறார்கள்.எனக்கு வெறுப்பு வந்து விட்டது.அதனால் தான் என்னை விட பல வயது மூத்தவர்,உங்கள் அனுபவத்தையும் தெரிந்து கொண்டால் ஒரு ஆணாவது காதலுக்கு தகுதியாக இருப்பாரா என்று என்னுடைய தேடலை இத்துடன் நிறுத்திக்கொள்வேன் என்று சொன்னாள்.

எனக்கும் அப்படிப்பட்ட காதல் தான் வேண்டும்.என்னை காதலிக்க உனக்கு விருப்பமா என்று அவளை கேட்க,அவளும் விருப்பம் தான்.ஆனால் கழுத்தில் அவன் கட்டிய தாலியை அவனிடம் கழட்டி கொடுத்து விட்டு வருகிறேன்.அவனை கணவனாக வைத்துக்கொண்டு உங்களிடம் பழகுவதை என் மனசாட்சி ஒத்துக்கொள்ளவில்லை.அவனை விட்டு பிரிந்து வரும் வரை எனக்காக காத்து இருக்க முடியுமா என்று கேட்டு நான் சரி என்று சொன்ன பிறகு போனவள் இது வரை வரவில்லை.

அவள் வந்து என்னை தேடும் போது நான் இல்லாமல் போனால் அது அவளுக்கு பெரிய ஏமாற்றம் ஆகி விடும்,கணவனும் இல்லாமல்,நானும் இல்லாமல் போனால் அவள் கதி என்னாவது.அதனால் இந்த இரயில் நிலையத்தில் அவள் வருகைக்கு காத்து இருக்கிறேன்,,இருபத்துநான்கு மணி நேரமும்.அவள் வருவாள்.

இந்த கதையை கேட்ட பண்டரினாதன் ,இது தான் காதலா.

நான் நினைத்த காதல் வேறு மாதிரி.

இதற்கு பெயரும் காதலா.

அவரை பார்த்து இதை நான் திரைப்படமாக தயாரிக்கலாம என்று கேட்க,அவரோ,படத்தை எப்படி முடிப்பீர்கள் என்று கேட்டார்.அது இருவருக்குமே ஒரு கேள்வி குறி தான்…



Rate this content
Log in

Similar tamil story from Romance