விடாமுயற்சி
விடாமுயற்சி
சிகாமணி படித்து முடித்து விட்டு வேலை தேடும் ஒரு இளைஞன்.
பல கம்பனிக்கு போய் வந்து விட்டான்.வேலை கிடைத்த பாடில்லை.ஏதாவது ஒரு காரணம் சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்கள்.அவனை போல நிறைய பேர் இப்படி சோகத்துடன் திரும்பி செல்வதை பார்த்து இருக்கிறான்.
சிகாமணிக்கு அலுத்து போய் விட்டது.வேலை தேடுவதை விட வேலை கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஆலோசித்து,ஒரு விளம்பரம் கொடுத்தான்.வேலையில்லா பட்டதாரிகள் வேலைக்கு அணுகவும் என்று தன்னுடைய விலாசத்தை கொடுத்தான்.நிறைய பேர் நேரில் வர,வந்தவர்களிடம் பெயர் விலாசம் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு,பகுதி நேர வேலை தான் ,அதுவே மாதத்தில் இருபதாயிரம் வரை சம்பாதிக்க முடியும்.கொடுக்கும் வேலையில் கௌரவம் பார்க்க கூடாது,நேரம் பார்க்க கூடாது,கிடைக்கும் வேலையை இழிவாக பேசக்கூடாது என்று நிபந்தனையில் கையொப்பம் வாங்கி கொண்டான்.சுமார் ஒரு ஐம்பது பேர்,விண்ணப்பம் கொடுத்தார்கள்.சாமர்த்தியம் இருந்தால் அவர்களே ஒரு நாளைக்கு முதலாளி ஆகலாம் என்றும் சொல்லி இருந்தான்.
ஐம்பது பேர் சேர்ந்த பிறகு,ஒரு விளம்பரம் கொடுத்தான்.எந்த வேலைக்கும் ஆட்கள் சப்ளை செய்ய முடியும்,தொடர்புக்கு தன்னுடைய நம்பரை கொடுத்து இருந்தான்.
ஒரு வாரத்தில் ஆட்கள் வேண்டும் என்று பலரும் வந்து விசாரிக்க தொடங்கினார்கள்.
இப்போது அவன் நினைத்தால் ஒரு நொடியில் ஆயிரம் பேரை அவனால் வேலைக்கு அனுப்ப முடியும்.முக்கியமாக திருமண வீட்டில் விருந்தில் உணவு பரிமாற,சினிமாவுக்கு துணை நடிகர்,கட்சிக்கு கொடி கட்ட, பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள,கோயில் திருவிழா வில் அலங்கார விளக்கு பிடிக்க,காவல் துறைக்கு உதவ,மேலும் பல சமூக சேவைகளுக்கு தேவையான ஆள் பலத்தை கொடுக்கும்,சிகாமணியின்
புதிய யுக்தி நல்ல வெற்றி பெற்று,வேலை தேடுவதை விட்டு வேலை கொடுக்கும் முதலாளியாக
உயர்ந்து எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்.