பிறந்த நாள்
பிறந்த நாள்
பிறந்த நாள்.
முருகன் எப்போதும் போல தன்னுடைய அலுவலகம் சென்றார்.
உள்ளே நுழையும் வாயிலில் ஒரு பதாகை வைக்க பட்டு இருந்தது.அதில் அவரை பெயரை ஒட்டு அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று எழுதி இருந்தது.
அவருடை இருபது வருட அனுபவத்தில் இப்படி ஒரு நிகழ்வை பார்த்தது இல்லை.உள்ளே நுழைந்ததும் அவருக்கு ஒரு மலர்க்கொத்து,ஒரு அட்டை பெட்டியில் இனிப்பு,கொடுத்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள்,அவருடைய சக பணியாளர்கள்.அவருக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
பொதுவாக அந்த நிறுவனத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சி யாருக்கும் நடந்தது இல்லை.அதுவும் அவருக்கு நடந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.அவர் ஒன்றும் பெரிய பதவி வகிக்கவில்லை.கொடுத்த மலர்க்கொத்து,இனிப்புகளை வேண்டாம் என்று சொன்னால் மரியாதை ஆக இருக்காது என்று எண்ணி,உடனே இனிப்பு பெட்டியை திறந்து எல்லோர் கையிலும் கொடுத்து சாப்பிட சொன்னார்.
சக பணியாளர்களும் மகிழ்ச்சியுடன் எடுத்து கொண்டு அவரை வாழ்த்தி விட்டு சென்றனர்.
அது முடிந்து தன்னுடைய இருக்கைக்கு சென்றார்.அவருக்கே அவருடைய பிறந்த நாள் நினைவில் இல்லை.அவருடைய பிறந்த நாள் தெரிந்த ஒரே ஆள் அவருடைய மனைவி.அவள் தான் பிறந்த நாள் அன்று பாயாசம் செய்து கொடுப்பார்.
ஆனால் அவர் இன்று உயிருடன் இல்லை.இந்த தம்பதிக்கு ஒரே மகன் ராஜா,ஒரு பெண்ணை பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.இது நடந்து பத்து மாதம் இருக்கும்.இந்த வேளையில் அவருடைய மனைவி ஏற்கனவே இருதய வியாதியுடன் இருந்து வந்தவர் மாரடைப்பில் இறந்து போனார்கள்.அம்மா இறந்ததற்கு வந்தவனை இவர் உள்ளேஅனுமதிக்கவில்லை.
அவனால் தான் அவருடைய மனைவியை இழக்க வேண்டி வந்தது என்று நினைத்து கொண்டார்.
மகனுடைய மனைவி ஒரு நிறுவனத்திற்கு உரிமையாளர் என்று மட்டும் கேள்வி பட்டு இருந்தார்.வசதியான பெண் நமது குடும்பத்திற்கு ஒத்து வர மாட்டாள், என்று தான் அவர் வேண்டாம் என்று சொல்லி வந்தார்.ராஜாவும் அதை கை விட நினைக்கும் வேளையில் அந்த பெண்,பிடிவாதமாக அவனை தான் மணம் முடிப்பான்,இல்லாவிடில் தற்கொலை செய்து கொள்வேன்.அதுக்கு இவன் தான் காரணம் என்று சொல்லி விடுவேன் என்று பயமுறுத்த வேறு வழியில்லாமல் அவளை திருமணம் செய்து கொண்டான்.ஆனால் அதுக்கு முன்னாடி அந்த பெண்ணை வீட்டிற்க்கு கூட்டி வந்து அம்மாவை அறிமுகம் செய்து வைத்தான்.அப்போது அந்த பெண்ணிடம் முருகன் மனைவி ஒரு வேண்டுகோள் வைத்தார்.என் மறைவுக்கு பிறகு,முருகனின் பிறந்த நாள் வரும் போது அதை கொண்டாடும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னார்.
அந்த பெண்ணும் சரி என்று சொல்லி இருந்தாள்.
போன பிறந்த நாளுக்கு முருகன் மனைவி இருந்தார்.இப்போது அவர் இல்லை.
அதனால் அந்த மருமகள் தான் இந்த ஏற்பாட்டை செய்து இருந்தாள்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு,அவரை MD ரூமுக்கு வர சொல்லி சொல்ல அங்கு சென்றார்.MD இறந்து ஒரு வருடம் ஆகிறது.அதற்கு பிறகு அவரது மனைவி நிர்வாகம் பார்ப்பதாக சொன்னார்கள்.முருகனுக்கு அதை பற்றி கவலை இல்லை.நேரடி தொடர்பும் இல்லை.
தயங்கிய படி MD அறைக்குள் சென்றார்.அங்கு MD யின் மனைவி இருந்தார்.கூடவே ஒரு இளம் பெண்ணும் இருக்க,தயங்கி கொண்டு வணக்கம் சொன்னார்.உட்கார சொன்னார்கள்,இவர் மறுத்து விட்டு நின்று கொண்டு இருந்தார்.அப்போது அந்த இளம் பெண் இவர் காலை தொட்டு வணங்கி,வாழ்த்த சொல்லி கேட்டாள்.இவரும் நல்லா இரும்மா என்று கூறி விட்டு,அம்மா எதுக்கு என்னை கூப்பிட்டீர் கள் என்று கேட்க,அவரும் இதற்கு தான் என்று சொல்லி விட்டு இந்த பெண்ணை தெரியுமா என்று MD மனைவி கேட்டார்.தெரியவில்லை என்று சொல்ல,இவள் தான் உங்களுக்கு மருமகளாக வர போகும் பெண்.இவள் தான் இன்று உங்களுக்கு பிறந்த நாள் என்று வாழ்த்த ஏற்பாடுகள் செய்தவள்.
இது என்னுடைய மகள்,பிடிவாதமாக உங்க மகனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி விட்டாள்.எதிர்பாராத விதம் MD இறந்து போனதால்,ஒரு வருடம் பொறுத்து திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விட்டேன்.உங்க மகன் எங்கள் மேற்பார்வையில்,நம்முடைய கிளையில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்.இவளும் மேல் படிப்பு படித்து கொண்டு இருக்கிறாள்.இவள் உங்க சம்மதமும் வாழ்த்துக்களும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி விட்டாள்.உங்கள் அனுமதி இன்றி ஒரு முறை உங்கள் மனைவியை பார்த்து இருக்கிறாள்,அதுவும் அவர் விருப்ப பட்டதால்.அப்போது தான் உங்கள் பிறந்த நாளை மறக்காமல் கொண்டாட வேண்டும் என்று சொன்னார்கள் என்று இவள் என்னிடம் கூறினாள்.அதுபடி இன்றி பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்தாள்.இப்போது சொல்லுங்க இந்த பெண்ணை உங்க மகனுக்கு கட்டி வைக்க சம்மதமா என்று கேட்டார் MD மனைவி.
இவர் எனக்கு இத்தனை நாள் சோறு போட்ட முதலாளி யின் பொண்ணு என்று தெரியாது.அந்த விசுவாசம்
மறக்காமல் இருக்க சாம்திக்கிரேன்.ஆனால் இன்று முதல் என் வேலையை ராஜினாமா செய்து கொள்கிறேன்.என் பிறந்த நாள் வாழ்கையில் மறக்க முடியாத நாள்,காரணம் என் மகனுக்காக என் வேலையை ராஜினாமா செய்கிறேன் வணக்கம் என்று சொல்லி விட்டு வெளியில் வந்தார்.
முற்றும்.