உண்மையும் நகலும்
உண்மையும் நகலும்
ஒரு ஊரில் ஒரு மந்திரவாதி இருந்தான்.மந்திரத்தை விட தந்திரம் செய்வதில் கெட்டிக்காரன.
ஒரு நாள் அந்த ஊரின் மைய பகுதியில் இரண்டு குதிரைகளை கொண்டு வந்து நிறுத்தினான்.நிறுத்தி ஒரு போட்டியை வைததான்.இரண்டு குதிரைகளில் உணமை யான குதிரையை கண்டு பிடிப்பவர்களுக்கு,ஆயிரம் காசு கள் பரிசு என்றான்.
பலரும் பல வகையில் முயற்சி செய்து பார்த்தார்கள். புல்லை கொடுத்து பார்த்தார்கள்,சாட்டையால் அடித்து பார்த்தார்கள்
முடியவில்லை.
அந்த ஊரில் ஒரு போக்கற்றவன் இருந்தான்.அவன் வந்து கண்டு பிடிப்பதசக கூற
இவனா என்று கேலி பேசி சிரித்தார்கள்.அவன் கொஞச நேரத்தில் ஒரு பெண்குதிரையை கொண்டு வந்தான்.அந்த இரண்டு குதிரைக்கு நடுவில் நிறுத்த, அரை மணி நேரத்தில் அதில் ஒரு குதிரை பெண் குதிரை பக்கம் திரும்பியது.
மக்கள் உற்சாகத்தில் சததம் போட மந்திர வாதி அவன் சொன்ன பணத்தையும் கூட அந்த குதிரை யம் கொடுத்து விட்டு தலை குனிந்து சென்றான்.