ராஜ்ஜியம்
ராஜ்ஜியம்
ராஜ்ஜியம்.
கமலா ஒரு கூட்டு குடும்பத்தின் தலைவி.மகன்,மகள்,கொழுந்தன், நாத்தனார்,மாமனார், மாமியார்,கணவர்,அவருடைய
பாட்டி.இப்படி எல்லோரும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
கூட ஒரு நாய்,எல்லாம் சேர்த்து பத்து பேர்.இந்த பத்து பேரும் எந்த தேவைக்கும் கமலாவை தான் அணுகுவார்கள்.எல்லா தேவைக்கும் ஒப்புதல் கொடுக்க முடியாது.மாமானர் காபிக்கு சக்கரை கேட்பார்,அவருக்கு நீரழிவு இருப்பதால்,அதை கொடுக்க முடியாது.கெஞ்சுவார்,மிரட்டுவார்,கோபித்து கொள்வார்.எதற்கும் அஞ்சாமல் அவர் அருகில் சக்கரையுடன் வந்து டப்பாவில் இருந்து ஒரு கரண்டி எடுத்து போடுவது போல் பாவனை செய்து விட்டு போய் விடுவார்.அப்புறம் மாமனாருக்கு காபி இனிக்கும்.மாமியாருக்கு உப்பு சேர்த்து கொடுக்க கூடாது.உப்பு போரவில்லை என்று யுத்தமே நடக்கும்,கமலா அசைய மாட்டாள்.
கணவருக்கு பெற்றோரை மருத்துவரிடம் கூட்டி கொண்டு போக நேரம் இருக்காது.அதுவும் கமலா தான் செய்ய வேண்டும்.நாத்தனார் கல்லூரி வேலைக்கு போகும் பெண்.அவருக்கு வேண்டிய காலை மதிய உணவு,விதவிதமாக கொடுத்து அனுப்ப வேண்டும்.இல்லாவிட்டால் சாயங்காலம் வந்து சாப்பாட்டை தோழிகள் கிண்டல் செய்கிறார்கள் என்பாள்.
அண்ணா கொடுக்கும் கைசெலவு பணம் போதாது என்று கொழுந்தன் கேட்கும் போது மறுக்க முடியாது.கணவன் கை செலவிற்கு கொடுத்த பணத்தில் ஒரு பகுதி அவனுக்கு போய் விடும்.வீட்டு செலவு கணக்கு,மாமியாரின் உறவு அல்லது நண்பர்கள் வரும் போது பிரத்தியேக கவனிப்பு.
குழந்தைகளின் வீட்டு பாடம்.அந்த நேரம் ஆனால் என்னை ஏன் குளிபாட்டாவில்லை என்று கேட்கும் விதத்தில் காலடியில் வந்து நிற்கும் நாய்க்குட்டி.
இவள் படும் கஷ்டத்தை பார்த்து மாமனார் எதுவானாலும் பக்கத்தில் வந்து கேட்டு வாங்கி கொள்வார்.சாப்பிட்ட தட்டும் கூட கழுவும் இடத்தில் வைத்து விடுவார்.மாமியார் ,அவர் இருக்கும் இடத்திற்கு சரியான நேரத்தில் சரியான முறையில் போய் சேர வேண்டும்.காய்ச்சல் தலைவலி,எனக்கு வராத தலை வலியா என்று கேட்டு விடுவார்.யாருக்கும் எந்த குறையும் வைக்காமல் அந்த குட்டு ராஜ்ஜியத்தை தன் கட்டுப்பாட்டிற்கு வைத்து இருந்தாள் கமலா.
ஆனால் அவர் எதிர்பார்க்கும் இரண்டு விசயம்,கணவன் வேலைக்கு புறப்படும் போது சமையல் அறைக்கு வந்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும்,அது போல இரவு தூங்கும் முன்பு அவளிடம் கணவன் அவளிடம் சாப்பிட்டாயா என்று மறக்காமல் கேட்க வேண்டும்.இது இரண்டும் மட்டும் இருந்தால்,அவளுடைய ராஜ்ஜியத்தின் உள்ளே யாரும் மூக்கை நுழைக்க முடியாது.அவளுக்கு தெரியும்,மாமா மாமியார் இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்கட்டும்.நாத்தனார் வேறு வீட்டிற்கு போய் விட்டால் அவளும் என்னை மாதிரி தான்.என்ன துன்பம் இருந்தாலும்,உழைத்து களைத்து வரும் கணவனிடம் புகார் கூறி அவனுடைய நிம்மதிக்கு கேடு வர கூடாது.இது தான் அவளுடைய சித்தாந்தம்.அவளை விட அந்த ராஜ்ஜியத்தை ஆள வேறு யாருக்கும் பொறுமை இருக்காது.