சூப்பர் பவர்
சூப்பர் பவர்
சூப்பர் பவர்.
அவள் மிக்க தைரியம் மிக்க பெண்.
யாரையும் பார்த்து பயப்பட மாட்டாள்.
அதற்காக அடிதடி சண்டைக்கு போகும் குணம் உள்ளவள் அல்ல.
நூறு பெண்கள் வேலை செய்யும் இடத்தில் நித்யா பணி செய்து வருகிறாள்.
அவளுடன் வேலை செய்யும் தோழி
சுந்தரி எப்போதும் கல கல ப்பாக இருப்பாள்.இன்று அவள் முகம் வாடி இருந்தது.அவளிடம் காரணம் கேட்டதற்கு,ஒன்றும் இல்லை என்று கூறி விட்டாள்.அவளுடைய முகத்தை உற்று பார்த்த போது அவளுடைய முக வாட்டதின் காரணம் புரிந்து கொண்டாள்.
இந்த நூறு பெண்களுக்கு மூன்று மேற்பார்வையாளர்கள் இருந்தனர்.
இவளுடைய மேற்பார்வையாளர் இவளுக்கு வேலையை சொல்ல அருகில் வந்த போது,அவனையும் உற்று பார்த்த போது இவளுக்கு ஆச்சரியம்.உடனே தோழி சுந்தரியை கூப்பிட்டு உன் முகவாட்டதிற்கு காரணம் இந்த மேற்பார்வையாளர்,சரி தானே என்று கேட்டாள்.அவளும் ஆமாம் என்று சொல்ல,எப்படி கண்டு பிடித்தாள் என்று வியந்து கொண்டு இருந்தாள்.
நித்யா விற்கு,அவள் தோழி சுந்தரி நேற்று நடந்த நிகழ்ச்சியை பற்றி கவலை படுகிறாள் என்று புரிந்து கொண்டாள்.அதே போல தான்,அந்த மேற்பார்வையாளர்.அவனும் சுந்தரியை பற்றி நினைத்து கவலை பட்டது அவளுக்கு தெரிந்தது.
இருவரிடமும் சேர்ந்து விசாரித்த போது,இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி உள்ளார்கள்.அதனால் அந்த பையன் சுந்தரியை திருமணம் செய்ய விரும்பி,சுந்தரி வீட்டிற்க்கு
சென்று சம்மதம் கேட்டு இருந்தான்.
அதற்கு சுந்தரியின் பெற்றோர்கள் மறுத்து விட்டனர்.அது தான் இருவரது சோகத்திற்கு காரணம்.
நித்யா தனக்கு இப்படி ஒரு சக்தி இருக்கா என்று ஆச்சரிய பட்டாள்.
அது உண்மை தானா என்று அறிய வேறு சில பேரை பார்க்க நேற்று அவர்களுக்கு நடந்த சம்பவங்கள் குறித்து சொல்ல அது சரியாக இருந்தது.நேற்று மட்டும் நடந்த நிகழ்வுகளை கண்டு பிடிக்கும் அபார சக்தி அவளிடம் இருந்தது.