இளம் சிவப்பு
இளம் சிவப்பு
இளம் சிவப்பு
தூய்மையை கடைபிடித்தால்,ஆரோக்கியமாக இருக்கலாம் என்று பள்ளி நாட்களில் படித்தது வருணுக்கு நினைவுக்கு வந்தது.
இப்போது அவன் ஒரு பிரம்மச்சாரி.
அவன் தங்கி இருக்கும் அறை அவனைப்போல அலங்கோலமாக இருந்தது.
தினமும் அறையை ஒழுங்கு படுத்தி விட்டு தான் அவன் பணிக்கு செல்கிறான்.அந்த அறையில் அவனை தவிர வேறு யாரும் இல்லை.ஆனால் இரவு வந்து பார்க்கும் போது அது அலங்கோலமாக தான் இருக்கும்.
அவன் புறப்படும் நேரத்தில்,அவன் ஒழுங்கு படுத்திய அறை தலை கீழாக மாறி விடும்.
காலணி ஜோடியின் ஒற்றை காலணி இருக்கும் அதன் ஜோடியை கண்டு பிடிப்பதற்கு,அவன் அந்த அறையை தலை கீழாக மாற்றி விடுவான்.
எதையும் எடுத்த இடத்தில் வைத்து பழக்கம் இல்லை.
காலணியை சுத்தம் செய்ய பழைய துணிதேடுவான்,கிடைக்காது,
அப்புறம் ஒரு பனியன் அல்லது கைக்குட்டையை எடுத்து சுத்தம் செய்து விட்டு வீசி விடுவான்.
பனியன் அல்லது கைக்குட்டையை தேடும் போது அது குப்பை கூடையில் கிடக்கும்.இது ஒரு உதாரணமே.தூய்மை என்றால் சுத்தம்,ஒழுங்கு என்பது அவனுக்கு தெரியாது.
காலி பாட்டில், எறிந்த தீக்குச்சிகள்,
சாப்பிட்டு முடித்த உணவு பொட்டலங்கள் என்று அறை முழுவதும் நாறிக்கொண்டு இருக்கும்.
யாரோ ஒரு நண்பன்,துணைக்கு ஒரு பெண் வந்தால்,அதாவது மனைவி வந்தால் சரித்திரத்தை மாற்றி விடுவாள் என்று கூற, வருணுக்கு
திருமணத்தில் நம்பிக்கை இல்லை,இருந்தாலும் ,துணையாக வாழ அவனுடைய சிநேகிதி சம்மதிக்க,அவளை அழைத்து வந்து சேர்ந்து வாழ துவங்கினான்.
வரும் போதே,அவன் போட்ட நிபந்தனை,சுத்தம் சுகாதாரம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தான்.அவளும் சரி என்று சொல்லி தான் வந்தாள்.வருண் அவளை பெரிதும் நம்பினான்.
இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து
திங்கள் அலுவலகம் செல்ல வேண்டும்.அவன் எழுந்து அவசரமாக குளித்து,உடையை தேடி அணிந்து கொண்டான்.காலுக்கு மட்டும் காலுறை இரண்டு வேறு வேறு நிறத்தில் தான் கிடைத்தது.
பரவாயில்லை கால்சட்டை அதை மூடிக்கொள்ளும்,வித்தியாசம் யார் கண்ணிலும் படாது என்று நினைத்து
தயார் ஆகி விட்டான்.
தோழி இன்னும் தூங்க,புறப்பட இன்னும் இருபது நிமிடம் தான் இருந்தது.அவளை இறக்கி விட்டு,இவன் தன் அலுவலகம் செல்ல வேண்டும்.அவளை தினமும் இறக்கி விட அவன் சம்மதம் சொன்ன பிறகு தான் அவள் கூட வந்து வசிக்க சம்மதம் சொல்லி இருந்தாள்.அவளை உலுக்கி எழுப்ப,நேரமாகிவிட்டது என்று இவன் திட்ட, டூ மினுட்ஸ் என்று சொல்லிக்கொண்டு,குளியல் அறைக்கு சென்றவள்,முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு வந்தவள்,அவன் இருப்பதை கூட பொருட்படுத்தாமல்,உடையை கழட்டி விட்டு வெறும் உள்ளாடையுடன்
நின்று கொண்டு மாற்று உடையை அணிந்து,உடல் முழுவதும் வியர்வை நாற்றத்தை மறைக்க வாசனை திரவியம் அடித்து கொண்டாள்.
குளிக்கவில்லையா என்று வருண் கேட்க,அது இரவுபார்த்துக்
கொள்ளலாம் என்று கூறி விட்டு காலணியைமாட்டிக்கொண்டு,
கதவுக்கு வெளியில் சென்றாள்.
அவளிடம் பெண்மை யை தேடினால் கூட கிடைக்காது,சுத்தம் தூய்மை அவனே மேல் என்று வருண் நினைத்துக்கொண்டு,அவளை அழைத்துக்கொண்டு வண்டியில் சென்றான்.
இரவு திரும்பி வந்ததும்,அவளால் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை என்று புரிந்து கொண்டு,
அந்த அறையில் அவளை மட்டும் தங்க அனுமதித்து விட்டு,அவன் தங்க நண்பனிடம் வேறு அறை தேடச் சொன்னான்.
போகும் அறையில் தூய்மையை கடைப் பிடிப்பான என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.