கடந்த காலம்
கடந்த காலம்
கடந்த காலம்
எல்லோருக்கும் கடந்த காலம் என்று ஒன்று உண்டு.தினேசுக்கும் அப்படி தான்.அதை அவனால் மறக்க முடியவில்லை.இன்றைக்கு அவன் இருக்கும் இந்த நிலைக்கு காரணமான சம்பவம்,எப்படி மறக்க முடியும்.
பத்து வருடங்களுக்கு முன்பு அவன்
வாழ்ந்த வாழ்க்கை அப்படி.அவன் செய்த ஒரு சிறு தவறு எல்லாம் தலை கீழாக புரட்டி போட்டு விட்டது.
ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் பிறந்து கல்லூரியில் படித்து நல்ல IT கம்பனியில் வேலைக்கு சேர்ந்தான்.
ஒரு வருடத்தில் அவன் கூட வேலை செய்த பூர்ணிமா முன்னாடி கல்லூரி தோழி,காதலித்து திருமணம் செய்து கொண்டான்.அவள் பேரழகி இல்லாவிட்டாலும் அவளுடைய நடை உடை பாவனை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும்.அவளிடம் வம்பு செய்யாத ஒரே ஆள் தினேஷ் மட்டுமே.அவளை அடைய கல்லூரியில் பலர் முயன்றனர்.தேவை படும் போது செருப்பில் அடிக்க தயங்காத அவளிடம் யாரும் கிட்ட நெருங்க முடியவில்லை.அதில் ஒருவன் தான் கிருஷ்ணா.பூர்ணிமாவின் ஏளன பேச்சுக்கு ஆளானவன்.அந்த அவமதிப்பு மனதளவில் அவனுக்கு ஆறாத காயம்.அதை பழி தீர்க்க நேரம் பார்த்து கொண்டு இருந்தான்.
தினேஷ்,பூர்ணிமா வேலை செய்த நிறுவனத்தில் இவர்கள் இருவருக்கும் தலைமை அதிகாரி கிருஷ்ணா.அங்கு அவனை மீறி எதுவும் நடக்காது.வேலை செய்யும் இடத்தில் அவளை அடைய பல முயற்சிகள் செய்தும் அது கை கூடவில்லை.இந்த நேரத்தில் தான் தினேஷ் பூர்ணிமா திருமணம்.
அவளுக்கு அன்று அந்த திருமணம் அவசரம்.கிருஷ்ணா பார்வையில் இருந்து தப்பிக்க தான் தினேஷுடன்
அவசர கல்யாணம்.முடிந்து ஆறு மாதம் கிருஷ்ணா எந்த தொந்தரவும் தரவில்லை.இருவரும் விடுமுறை கேட்கும் போது அனுபவியுங்கள் என்று விடுமுறை கொடுத்து அனுப்புவான்.
ஆறு மாதத்திற்கு பிறகு,கிருஷ்ணா நண்பர்களுக்கும் சக பணியாளர்களுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்து எல்லோரையும் வர சொன்னான்.தினேஷ் கூட அதற்கு போக வேண்டாம் என்று தான் பூர்ணிமா விடம் கூறினான்.இல்லை அவன் திருந்தி விட்டான்.நீங்க கூட இருக்கும் போது என்ன கவலை என்று சொல்லி விட்டு,இருவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்.பெரிய கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்த இடத்தில் ஒரு பத்து பேர் அதுவும் ஜோடியாக வந்து இருந்தனர்.விருந்து ஆரம்பிக்க முதலில் மது வழங்க பட்டது.தினேஷ் வேண்டாம் என்று தான் மறுத்தான்.
பூர்ணிமா தான் ஒரு கோப்பையில் அவனுக்கும் இனி ஒரு கோப்பையில் அவளுக்கும் எடுத்து வந்து கொடுத்தாள்.அதை குடித்த அவனும்
பலவீன த்தில் மறுமுறை வாங்க போதை தலைக்கு ஏறியது.பூர்ணிமா என்று கூப்பிட,அவளை யாரோ இரண்டு பேர் வலு கட்டாயமாக ஒரு அறைக்கு இழுத்து செல்வதை பார்த்தான்.தட்டு தடுமாறி சென்று அறை கதவை தட்டினான்.சற்று நேரத்தில் கதவை திறந்து கிருஷ்ணா வெளியில் வர,உள்ளே பூர்ணிமா அரைகுறை ஆடையுடன் மயங்கி கிடந்தாள்.
சிரமப்பட்டு அவளை ஒழுங்கு படுத்தி வீட்டிற்கு கூட்டி வந்தான்.அவள் ஒரு வாரம் பேச முடியவில்லை.தப்பு செய்து விட்டேன் என்று மட்டும் முனகி கொண்டு இருந்தவள்.என் சாவிற்கு யாரும் காரணம் அல்ல என்று எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கி விட்டாள்.
அன்று மட்டும் அவன் குடிக்காமல் இருந்தால் இது நடந்து இருக்காது.பல நாள் பட்ட அவமானத்தை கிருஷ்ணா அன்று தீர்த்து கொண்டான்.அதுவும் அவன் அங்கு இருக்கும் போதே.இப்படி நம்பிக்கை துரோகம் செய்வான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.ஒரு நாள் கவலையை மறக்க பாருக்கு போனான்.அங்கு நன்றாக குடித்து விட்டு தள்ளாடி கொண்டு இருந்தான் கிருஷ்ணா.இது தான் சந்தர்ப்பம் என்று அவனுடன் தகராறில் ஈடுபட்டான்.சமயம் பார்த்து பீர் பாட்டிலில் அவன் தலையில் அடித்தான்.கிருஷ்ணா நிலை தடுமாறி விழுந்தான்.உடைந்த பாட்டிலை வயிற்றில் இருமுறை சொருகி எடுக்க அங்கேயே கிருஷ்ணா உயிரை விட்டான்.நேராக சென்று போலீசில் சரணடைந்து தற்காப்பு க்காக தாக்கி விட்டேன் என்று எழுதி கொடுத்து விட்டேன்.
கேஸ் நடந்து பத்து வருடம் தண்டனை.போதுமான சாட்சியும் இல்லை.இருந்த அத்தனை பேரும் போதையில் இருந்தது,அவனுக்கு சாதகமாக இருந்தது.
இன்றுடன் அவனுக்கு பத்து வருட தண்டனை முடிந்து வெளியில் வருகிறான்.இனி அவன் நல்லவனா கெட்டவனா என்று அவனுக்கு தெரியவில்லை.