பணம்
பணம்
பணம் இல்லாமல் இன்றைக்கு எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு மனிதனை வாழ வைக்க இந்த பணம் பெரிதும் உதவுகிறது.
பணம் இனி ஒரு பசி.
இந்த பசி அடங்கவே அடங்காது.
ராஜாவும் இளைமை காலத்தில் பணம் இல்லாத போது,இதை நாம் சம்பாதிக்க முடியுமா என்று நினைத்தான்.கடவுள் கொடுக்க நினைத்தால் வீட்டு கூரையை பிளந்து கொண்டு கொடுப்பார் என்று சொல்வார்கள்.
உண்மை தான்.பணம் நினைத்தால் தான் வரும்,நினைத்தால் போய் விடும்.
ராஜா தன்னுடைய கல்லூரி படிப்பு முடிந்து பட்டமும் வாங்கி விட்டான்.
அவன் இருப்பது ஒரு கிராமம்.பக்கத்து நகரத்திற்கு கூட அவன் சென்றது கிடையாது.அப்படி இருக்கும் போது யாரிடம் வேலை கேட்பது,எப்படி கேட்பது என்று கோட்ஸ் தெரியாமல் திண்டாடினான்.
தெரிந்த உறவுக்காரர் ஒருவர்,பக்கத்து நகரத்தில் ஒருவரை அறிமுகம் செய்ய அவருடைய உதவியால் அவனுக்கு வேலை கிடைத்தது.முழுசா நூறு ரூபாய் சம்பாதிக்க வழி தெரியவில்லை.இப்போது மாதம் 250ரூபாய் சம்பளம்,இது 1975 வருடத்தில்.ஆனால் இன்று 47 வருடங்களுக்கு பிறகு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டு இருக்கிறான்.இந்த 47 வருடமும் வேறு நிறுவனத்தில் வேலை தேடவில்லை.படித்த B.com படிப்பிற்கு என்ன வேலை உண்டோ அதை தான் இன்று வரை செய்து வருகிறான்.
ஆனால் அவனுடைய அடித்தளம் நேர்மை தவறாமை.பன்னிரெண்டு மணி நேரத்திற்கு மேல் ஒரு நாளில் வேலை செய்து வந்தான்.வார்ஸ் விடுமுறை தவிர வேறு விடுமுறை எடுத்தது இல்லை.
அவனுடைய ஒழுக்கம்,பணிவு,நேர்மை,அடுத்தவரை மதிக்கும் பண்பு,நேசம் என்று பல குணங்கள் அவனுடைய வாழ்க்கையை மேம்படுத்தியது.
ஒரு காலத்தில் செருப்பு வாங்க காசு இல்லை.சட்டை வாங்க பணம் இல்லை.சொந்தமாக சைக்கிள் கூட கிடையாது .மகாலட்சுமி போல மனைவி வந்தாள்.அவருக்கும் அரசாங்க வேலை கிடைக்க,ராஜாவின் தேவைக்கு அதிகமாக பணம் கிடைத்தது.
இன்று இந்த வசதி எப்படி வந்தது.
வாழ்கையில் நேர்மை,கடின உழைப்பு,பொறாமை கிடையாது.உதவி கேட்டால் உதவும் குணம்.முக்கியமாக யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை.இந்த குணங்கள் தான் அவனுக்கு செல்வத்தை கொடுத்ததா,தெரியாது.
ஆனால் அவன் பணத்தை தேடி ஓடவில்லை.பணத்தின் மீது ஆசை படவில்லை.இன்று பணம் அவனிடத்தில் ஆசை கொண்டு அவனிடம் தஞ்சம் புகுந்தது .
பணத்தை பணமாக மதிக்க வேண்டும்.பணம் எதையும் செய்யும் என்று எண்ண கூடாது.
அதுக்கு விருப்பம் இருந்தால் நீங்க விரும்பாவிட்டாலும் உங்களிடம் அது வரும்.
முற்றும்.