Vadamalaisamy Lokanathan

Horror Crime

4  

Vadamalaisamy Lokanathan

Horror Crime

கற்பு

கற்பு

3 mins
224


கற்பு


நளினி வேலை செய்யும் மென்பொருள் நிறுவனம் இது நாள் வரை வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதி அளித்து இருந்தது.

ஆனால் வரும் வாரம் முதல் அலுவலகம் வர சொல்லி விட்டார்கள்.இனி சென்னைக்கு சென்று தங்கும் இடம் தேடி பணிக்கு செல்ல வேண்டும்.

கொரோனா வருவதற்கு முன்பு ஒன்றாக தங்கி வேலை பார்த்த தோழிகள் யாரும் இப்போதைக்கு வருவதாக தெரியவில்லை.

நளினி தனியாக தங்க இடம் தேட வேண்டும்.அறிமுகம் இல்லாத வேறு ஒருவருடன் தங்க அவளுக்கு விருப்பம் இல்லை.

எதையும் சமாளித்து ஆக வேண்டும்.அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.துணைக்கு சென்னைக்கு வர அப்பா அம்மாவிற்கு முடியாது. அப்பா ஒரு சிறு வியாபாரம் செய்து வருகிறார்.

தங்கை கல்லூரியில் படிப்பதால் அம்மா அவளுடன் இருந்தாக வேண்டும்.

சென்னைக்கு அதிகாலை வந்து சேர்ந்து,அவள் தங்கும் இடம் கிடைக்கும் வரை,கம்பனி கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க அவளுக்கு அனுமதி அளித்து இருந்தது.

ஒரு வாரம் அவளுக்கு அனுமதி கொடுத்து இருந்தார்கள்.

அதற்குள் தேடி கொள்ளலாம் என்று முடிவு செய்து அது வரை அங்கு இருந்து வேலைக்கு சென்று வந்தாள்.


அது ஒரு மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு.அதில் இவளுக்கு ஒதுக்க பட்ட,அறையில் தங்கி வேலைக்கு போக துவங்கினாள்.

காலையில் மாலையில் சாப்பாடு கெஸ்ட் ஹவுஸ் சமயல்காரர் செய்து கொடுத்து விடுவார்.


மூன்று நாட்கள் கடந்து விட்டது.ரொம்ப நாள் கழித்து அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்வது கஷ்டமாக இருந்தது.மாலை அறைக்கு திரும்பும் போது மிகவும் களைப்பு ஆகி விடுகிறது.சென்னை வெயில் அவளை மேலும் களைப்படைய செய்தது.

அறைக்கு வந்ததையும் உணவை அறைக்கு கொண்டு வர சொல்லி இருந்தாள்.உணவும் வந்தது அதை சாப்பிட்டு தண்ணீரை குடித்தாள்,ஏற்கனவே களைப்புடன் இருந்த அவளுக்கு,உணவும் அருந்த தூக்கம் கண்ணை சுழற்றி அடித்தது.

சாப்பிட்ட தட்டை அறைக்கு வெளியில் வைத்து விட்டு,கைகளுவ பாத்ரூம் சென்றாள்,கையை கழுவி துடைத்து கொண்டு,வெளியில் வர கட்டில் மேல் இருந்த போன் அடிக்க,படுக்கையில் சாய்ந்து அமர்ந்து பேசி முடித்தாள்.அவளுடைய அம்மா தான் பேசினது.அவர் ஏதோ பிரச்சினை கூற சிறிது கண்ணை மூடி யோசனை செய்ய,அப்படியே தூங்கி விட்டாள்.விளக்கு எரிந்து கொண்டு இருந்தது.கதவு இன்னும் தாள் போடவில்லை.


அவளுக்கு தூங்கியதே தெரியவில்லை.காலையில் கண் விழிக்கும் போது,உடம்பு ஒரே வலி,அன்று விடுமுறை ஆனதால் அலராம் வைக்கவில்லை.மணியை பார்க்க ஒன்பது காட்டியது.கதவு வழியாக சூரிய வெளிச்சம் வந்து கொண்டு இருந்தது.

அவளால் எழுந்து நிற்க முடியவில்லை.முழங்கால்கள் மற்றும் தொடை பகுதி அதிகமாக வலித்தது.

கூடவே பிறப்பு உறுப்பு வலித்தது.

தட்டு தடுமாறி பாத்ரூம் சென்று விட்டு தண்ணீர் விட்டு கழுவும் போது

பிறப்பு உறுப்பில் பசை போல ஒட்டி கொண்டு இருப்பது அவளுக்கு தெரிந்தது.

சற்று தடுமாறி கொண்டு வெளியில் வந்து பார்க்க,ராத்திரி கதவை மூடி

தாள் போடாமல் படுத்தது நினைவிற்கு வந்தது.கட்டில் மேல் அவள் போட்டு இருந்த உள்ளாடை கிடந்தது.ராத்திரி உள்ளாடையை கழட்ட வில்லை,அப்புறம் என்று யோசிக்கும் போது ஏதோ அசம்பாவிதம் நடந்து இருப்பதை உணர்ந்தாள்.தூக்க மயக்கத்தில் கதவை தாழ் போடாமல் படுத்த விட்டேன் போல இருக்கிறது,அதை பயன்படுத்தி யாரோ உள்ளே வந்து பாலி யியல் பலாத்காரம் செய்து இருப்பது புரிந்தது.

நிலைமை புரிந்த அவள் தன்னுடைய நிறுவனத்தின் HR மேனஜர் போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கூற,அவரும் அங்கு வந்து சேர்ந்த பிறகு போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

வந்து பார்த்த அவர்கள்,கேமராவை பரிசோதிக்க ஒருவன் நளினி அறைக்குள் நுழைந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வருவது தெரிந்தது.கடைசியில் அங்கு சமைத்து கொடுக்கும் சமையல்காரன் என்பது தெரிந்தது.

சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததை ஒப்பு கொண்டான்.

காமிராவில் அவன் அந்த அறைக்குள் இரண்டு முறை சென்று வந்தது தெரிந்தது.முதல் முறை சாப்பாடு கொடுக்க,இரண்டாம் முறை வந்து தட்டை எடுத்து கொண்டு போய் விட்டு மீண்டும் வந்து கதவை தள்ளி திறந்து உள்ளே செல்வதை கேமராவில் தெளிவாக தெரிந்தது.அவன் தான் மயக்கத்தில் இருந்த நளினியை பலாத்காரம் செய்து,கற்பழிப்பு செய்ததை ஒப்பு கொண்டான்.அவனை கைது செய்து அழைத்து சென்றார்கள்.

நளினி அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட மூன்று மாதம் ஆகியது.

அந்த சமையல் காரனுக்கு சிறை தண்டனை கொடுத்து சிறையில் அடைக்க பட்டான்.


Rate this content
Log in

Similar tamil story from Horror