வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
ராஜாவின் பெற்றோர் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு ராஜாவை பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தனர்.இருக்கும் சொத்தை அடமானம் காட்டி வங்கியில் கல்வி கடன் வாங்கி படிக்க வைத்தனர்.
படிப்பு முடிந்து வளாக நேர்காணல் கலந்து கொண்டு கடைசி படி வரை சென்று,தேர்வு ஆகாமல் திரும்பி விட்டான்.காரணம் அவனுக்கு
மற்ற மொழிகள் எதுவும் தெரியாது.
அதனால் வேலைக்கு தேர்வு ஆகவில்லை.
கல்லூரி முடிந்து வெளியில் வந்தும் முயற்சி செய்து வேலை அமையவில்லை.
இப்படி ஒரு வருடம் ஓடி விட்டது.
இவனும் வேலையில்லா பட்டதாரி கூட்டத்தில ஒருவனா நின்று கொண்டு இருந்தான்.
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் நேரமும் நெருங்கி
வர,விவசாயத்தை நம்பி அதில் கவனத்தை செலுத்தினான்.
விவசாய அதிகாரிகளை கலந்த போது,தேனீ வளர் ப்பு லாபம் தரும்
தொழில்,அதில் கவனம் செலுத்த சொன்னார்கள்.ஆரம்பத்தில் பததாயிரம் ரூபாய் முதலீடு செய்து
ஆரம்பிக்க,நல்ல பலனைத் தந்தது.
நாளடைவில் பக்கத்து ஊரிலும் அதை விரிவு படுத்த மாதம் 50000
வரை லாபம் கிடைக்க,கல்வி கடனை அடைத்து விட்டு, தேனீ வளர்ப்பு பற்றி வகுப்பு எடுத்து,வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து கொடுத்தான்.
இன்றைக்கு புது வீடு கார் என்று
மிக வசதியுடன் வாழ்ந்து வருகிறான்.இன்றைக்கும் தாய்மொழி தான் அவனுடைய
Official language. பிற மொழிகள் தெரியவில்லை என்ற வருத்தம் அவனுக்கு இல்லை.