மறுமை
மறுமை
மறுமை
அவன் இறந்து விட்டான்.அதுவும் கடுமையான மாரடைப்பு.யோசிக்க கூட நேரம் இல்லை.இன்னும் அவன் செய்ய வேண்டிய கடமைகள் பாக்கி இருந்தது.ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்தது.பக்கத்து வீட்டு ராமு பத்தாயிரம் கடன் வாங்கி இருக்கிறார்.மறக்காமல் கேட்க வேண்டும்.நம்ம மகள் ராமுவின் பையனை காதலிக்கிறாள்.அதை சொல்லி ராமு பணம் கொடுக்காமல் ஏமாத்துவான் கவனம் என்றான் தன் மனைவியிடம்.அவளோ ஒன்னும் சொல்லாம போய் விட்டீங்க என்று சொல்லி அழுது கொண்டு இருந்தாள்.
எனக்கு வர வேண்டிய பீ எஃப் பணம் உனக்கு மட்டும் தான்,அம்மா பேரை நீக்கி விட்டு உன் பெயரை தான் போட்டு இருக்கேன்.பேங்கில் வைத்து இருக்கும் டெபாசிட் ரசீது
பீரோ மேலே இருக்கும் சூட்கேஸில் இருக்கிறது.அம்மாவுக்கு பென்ஷன் வருது.நீ ஒன்னும் கொடுக்க வேண்டாம்.பாவம் என்று நினைத்து உனக்கு இல்லாமல் எங்க அம்மாவுக்கு கொடுத்து விடாதே.
உன்னோட நகை வங்கி லாக்கரில் இருக்கு,அதன் சாவி,என்னுடைய அரணாவில் இருக்கு. இப்போ அதை அறுத்து எடுத்து விடுவாங்க.எப்படி அது உன் கைக்கு வரும்.என்ன நான் பாட்டுக்கு சொல்லி கொண்டு இருக்கேன்,நீ பாட்டுக்கு அழுதுட்டு இருக்கே.நீ தான் சொல்லி இருக்கே நான் செத்த அழ மாட்டேன் என்று.இப்போ ஏன் அழுகிறாய்,நடிப்பா,அட கழுதை நான் சொல்வதை கேட்காமல்,ரொம்ப வருத்தமா இருக்குற மாதிரி நடிக்காத.அப்புறம் உனக்கு ஒன்னும் கிடைக்காது.அப்புறம் நிரந்தரமா அழ வேண்டும்.அட உன் காது செவிடா,நல்ல நாளில் நான் கூப்பிட்டா திரும்பி பார்க்க மாட்டாய்.இப்போ உனக்கு வசதியா போச்சு.பீரோவில் என் சட்டைக்கு நடுவே இருபது ஆயிரம் வைத்து இருக்கேன்.கொஞ்சம் காது கொடுத்து கேளடி.அடி ன்னு சொன்னா சண்டைக்கு வந்து விடுவா.. பார்ற அடி ன்னு கூப்பிட்டது மட்டும் கேட்டு விட்டது.அழுகையை நிறுத்தி விட்டு என்னையே பாக்கிரா.
சொன்னதெல்லாம் கேட்டுதா என்றான்.தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி விட்டு அழ ஆரம்பித்தாள்.இவனும் அவளுக்கு கேட்டு விட்டது என்று பிடித்து கொண்டு இருந்த உயிரை விட்டான்.அது மேலே போய் இவனை எங்கு அனுப்பலாம், சொர்கமா,நரகமா என்று யோசிக்க ஆரம்பித்தது.
மக்களே எதையும் ரகசியம் என்று யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டாம்.உயிரோடு இருக்கும் போதே ஆண்கள் சொன்னால் பெண்கள் கேட்க மாட்டார்கள்.இறந்த பிறகு கேட்கவா போகிறார்கள்.
முற்றும்.