விசித்திர கதை.
விசித்திர கதை.
விசித்திர கதை.
கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்று சொல்வார்கள். மழை கொட்டி தீர்க்கும் போது யாருக்கு கல்யாணம் செய்து வைப்பது.
கழுதையின் தலைவன் ஒரு கூட்டம் கூட்டினான்.சுமார் பத்து பேர் அங்கு கூட,அவர்களை பார்த்து தலைவன் கழுதை பேச ஆரம்பித்தது.
உங்கள் கவனத்திற்கு சில குறிப்புகளை உங்கள் முன்பு வைக்கிறேன்.
1.நம்முடைய இனம் அழிந்து கொண்டு இருக்கிறது.
2.நம்மிடம் இருந்து இலவசமாக பாலை கறந்து கொள்ளை விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து கொண்டு இருக்கும் இந்த மனிதன்,நமக்கு சாப்பாடு போடுவது இல்லை.
3.லாரியில் அதிக பாரம் ஏற்றினால் அபராதம் போடும் இந்த மக்கள் நம்மீது ஏற்றும் அளவில்லா எடைக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
4.இந்த உலகில் எந்த மனிதன் தப்பு செய்தாலும் நம்முடைய பெயரை சொல்லி திட்டும் போது,நமக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்.
5.இவ்வளவு உழைப்பை கொடுத்த பிறகும் நாம் ஓய்வு எடுக்க ஒரு வீடு கிடையாது.
6.மனிதனுக்கு உழைத்து கொடுக்கிறோம்,அதன் மூலம் அவனுக்கு நிறைய வருமானம்.நம்மிடம் வேலை முடிந்தால் நம்முடைய ஜாதி பெயரை சொல்லி,உனக்கு என்ன கேடு என்கிறான்.அதுவே ஒரு நாயாக இருந்தால்,அதற்கு செல்ல பெயர்,உண்பதற்கு தனி உணவு,அவன் கூட படுக்கையில் படிக்கும் உரிமை.மருத்துவ உதவி,இத்தனையும் கொடுத்தும் அந்த நாயினால் அவனுக்கு ஒரு பைசா வருமானம் கிடையாது.
7.அவனுடைய மகன் சரி வர படிக்காவிட்டல் கழுதை மேய்க்க தான் லாயக்கு என்று நம்மை இழிவு படுத்துகிறான்.யார் துணையும் இல்லாமல் தான் நம் உணவை நாம் தேடி கொள்கிறோம் என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
8.ஒருவன் தவறு செய்தால் அவனுக்கு தண்டனை கொடுக்க அவனுக்கு மேக்கப் செய்து நம் மீது உட்கார வைக்கிறார்கள்.அதற்கு இனி மேல் கட்டணம் வசூலிக்க வேண்டும்
9. கழுதை கெட்டால் குட்டி சுவர் என்கிறார்கள்.அதை மேலும் யாரும் இடித்து விட கூடாது என்பதற்கு அங்கு காவல் நிற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
10. மழை பெய்யவில்லை என்றால் நம் கழுத்தில் தாலியை கட்டி விட்டு மனிதன் மாயமாக மறைந்து விடுகிறான்.கணவனால் கை விட பட்ட பெண்களுக்கு கிடைக்கும் உதவி நமக்கும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.
கூட்டம் முடிந்தது கழுதைகள் பின்னங்காலால் உதைத்து ஆரவாரம் செய்து குரல் கொடுத்தது.
அத்துடன் எல்லோரும் கலைந்து சென்றனர்.