Vadamalaisamy Lokanathan

Romance

4.0  

Vadamalaisamy Lokanathan

Romance

நிறைவேறுமா காதல்

நிறைவேறுமா காதல்

2 mins
407


நிறைவேறுமா காதல்

ராஜா தன்னுடன் வேலை பார்த்த நந்தினியை மனமார காதலித்தான்.

ஆனால் நந்தினி மறுக்கவும் இல்லை,விருப்பும் தெரிவிக்கவில்லை.

அவளுக்கு மனதளவில் அது நிறைவேறுமா என்று தெரியவில்லை.

அன்று அலுவலகத்தில் ஒரு விருந்து.

குடும்பத்துடன் எல்லோரும் கலந்து கொள்ள அழைப்பு இருந்தது.அது ஒரு மென்பொருள் நிறுவனம்,அடிக்கடி அப்படி விருந்து நடைபெறுவது வழக்கம்.ராஜாவின் பெற்றோரும் வந்து இருந்தனர்.

நந்தினிக்கு அம்மா மட்டும் தான்.

ராஜா அன்று நந்தினியை அறிமுக படுத்தி வைப்பதாக சொல்லி இருந்தான்.நந்தினியும் மறுப்ப ஏதும் சொல்லவில்லை. தன் பெற்றோருக்கு விருப்பம் இருந்தால்,நந்தினியை தீவிரமாக திருமணத்திற்கு வற்புறுத்த திட்டம் இட்டு வைத்து இருந்தான்.

விருந்தில் நந்தினியை பார்த்து விட்டு மிகவும் பிடித்துள்ள தாக கூற,

ராஜாவிற்கு தலை கால் புரியவில்லை.

மறுநாள் காலை அலுவலகம் வந்ததும்,நந்தினியை பார்த்து பெற்றோரின் சம்மதம் கிடைத்து விட்டது.உன்னுடைய சம்மதம் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் என்று கூறினான்.

அன்றும் அவள் பதில் ஏதும் கூறாமல் புன்முறுவல் பூத்த படி அங்கிருந்து சென்றாள்.

இவளை எப்படி சம்மதிக்க வைப்பது,

ஒரு நாளைக்கு மாமல்லபுரம் அழைத்து சென்று,குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டால்,வேறு வழி இன்றி சம்மதம் தெரிவித்து விடுவாள் என்று குருட்டு கணக்கு ஒன்று போட்டு அதை நிறைவேற்ற திட்டம் தீட்ட தொடங்கினான்.

இவன் எண்ணம் அறியாத நந்தினி

இவனிடம் உண்மையை சொல்லி விடலாமா,அதன் பின் விளைவு எப்படி இருக்கும் என்று யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

சீக்கிரம் வீட்டிற்கு சென்று அம்மாவிடம்,ராஜா நெருக்கடி கொடுப்பதை பற்றி விவரமாக கூற,அம்மாவும்,ஆமாம்,அவனுடைய பெற்றோர்கள் எப்படியோ என் கைபேசி எண்ணை கண்டு பிடித்து என்னிடமும் பேசினார்கள்.நானும் உன் சம்மதத்தை கேட்டு சொல்வதாக கூறி சமாளித்து உள்ளேன்.

உண்மையை கூறினால்,உன் வேலைக்கும் ஆபத்து,ராஜாவும் விட்டு விலகி விடுவான்.வேலை போனால் உன் நிலமையை பார்த்து வேறு யாரும் வேலையும் கொடுக்க மாட்டார்கள்.சாப்பாடு பிரச்சனையாக போய் விடும்.வாடகை வீட்டிலும் வசிக்க முடியாது.என்ன செய்வது.

காதலை நிறைவேற்ற முடியாமல் திண்டாட வேண்டி இருக்கிறது.

என்னமோ ஆகட்டும் ராஜாவிடம் உண்மையை சொல்லி விடலாம்,அதன் பின்விளைவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து கொண்டு தூங்க போனாள்.

நாளைக்கு நந்தினி என்ன சொல்ல போகிறாள்.,அறிந்து கொள்ள எனக்கும் ஆசை தான்.

உண்மையை அறிந்தால் ராஜாவும்

காதலை மறந்து விடுவான்,அவளுக்கு வேலையும் போய் விடும்.என்ன தான் அது சீக்கிரம் சொல்லுங்க என்று நீங்க கேட்பது காதில் விழுகிறது.

ஆம் அவள் ஒரு திருநங்கை.

இது நாள் வரை அவள் ஒரு பெண்ணாக சமாளித்து விட்டாள்.

இந்த உண்மையை அறிந்தால் நிறுவனம் என்ன முடிவு எடுக்கும் என்பது தெரியாது.காதலும் நிறைவேறாது.

நாளை என்ன நடக்குமோ.அடுத்த கதையில் பார்ப்போம்.



Rate this content
Log in

Similar tamil story from Romance